தமிழ் நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் இருந்த நிலையில் இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தவெக சார்பில் 21 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் அமைச்சர்களாகினர்.
இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்னகவே இருந்த அமைச்சர்களுக்கு இடையே இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி,
அமைச்சர் செங்கோட்டையனினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதித்துறை ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.ஏ. செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூமிதானம், கிராமதானம் மற்றும் சட்டமன்றம்







