6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு, நாளை முதல் ஜன.19 வரை தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 கேரள மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.