32.2 C
Chennai
September 25, 2023
செய்திகள்

பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 81 வயதான கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

2017 டிசம்பரில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வரவர ராவ், அடுத்த நாள் நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்திற்கு காரணம் என 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையில் உடல் நலக்குறைவு காரணமாக வரவர ராவ் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் மீதான வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2.5 ஆண்டுகளுக்கு பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் ராவிற்கு 6 மாதக்காலம் இடைக்கால ஜாமின் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அவருடைய பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், பினைத் தொகையாக 50 ஆயிரம் செலுத்த வேண்டும், வழக்கு விசாரணை முடியும் வரை மும்பையில் இருக்க வேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Web Editor

என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!

Web Editor

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய ‘சென்னை பஸ் செயலி’- அமைச்சர் சிவசங்கர்

Web Editor