ஆசிரியர் தேர்வு இந்தியா

பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்

இந்திய-சீன எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகில் உள்ள இந்திய சீன எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் சீன எல்லையை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்த சீன வீரர்கள் விவரம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட மறுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது ஏற்பட்ட மோதலினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால், போர் மூளும் அபாயம் எழுந்தது. இந்த நிலையில் இருநாடுகளின் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் போது பாங்கோங் த்சோ ஏரி அருகில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு படைகளையும் முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து பேசப்பட்டது. இதையடுத்தே இருநாட்டு படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்டதாக நேற்று இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி -மத்திய அரசு

Web Editor

இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

Halley Karthik

கர்நாடக சட்டசபை தேர்தல்; நோட்டாவை தேர்வு செய்த 2.6 லட்சம் வாக்காளர்கள் -தேர்தல் ஆணையம் தகவல்!

Web Editor