பல்வேறு அசத்தலான சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில் போகோ நிறுவனத்தின் எக்ஸ்5 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ, தனது 5ஜி ஸ்மார்ட்போன் வரிசையில் மேலும் ஒரு உறுப்பினரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், இந்தியாவில் போகோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் உலகின் சில சந்தைகளில் மட்டும் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது இந்திய மண்ணில் கால்வைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறப்பம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 12
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் ப்ராஸசர்
- 6.67 இன்ச் ஃபுல் எச்.டி. மற்றும் அமோலெட் திரை
- 1080×2400 பிக்ஸல் ரெசல்யூஷன்
- 6 ஜி.பி / 8 ஜி.பி. RAM
- 128 ஜி.பி / 256 ஜி.பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 48 + 8 + 2 மெகா பிக்ஸல் பின்புற கேமரா
- 13 மெகா பிக்ஸல் ‘செல்ஃபி’ கேமரா
- 5,000 எம்.ஏ.எச் பேட்டரி
- 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
-
189 கிராம் எடை
விலை நிலவரம்
போகோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனில், 6 ஜி.பி RAM + 128 ஜி.பி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.18,999-க்கும், 8 ஜி.பி RAM + 256 ஜி.பி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.20,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 21ஆம் தேதி ஃபிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. அன்றைய தினம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.