அதிமுக – பட்டாளி மக்கள் கட்சியிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பாமகவின் தேர்தல் கூட்டணியும் அதன் வெற்றி தோல்விகளையும் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் பாமக
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 1980களில் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்த மருத்துவர் ராமதாஸின் சமூதாய அமைப்பு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாகியது. கடந்த 1991ம் ஆண்டு போராட்டக் களத்தில் இருந்து தேர்தல் களத்திற்கு வந்தது. அப்போது நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தால் மாநிலம் முழுக்க வீசிய அனுதாப அலையால், திமுக படுதோல்வியடைந்தது. அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சரானார். ஆனால், அந்த அலையையும் மீறி பாமக வேட்பாளர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். சட்டப்பேரவைக்குள் பாமக தனது முதல் உறுப்பினரை அனுப்பியது.
இதையடுத்து, 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மீதான அதீத எதிர்ப்பு அலையினால் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், இந்த இருபெரும் கட்சிகளின் கூட்டணியிலும் இல்லாமல் பெரிதும் அறியப்படாத திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்று, மாநில அளவில் கவனத்தை ஈர்த்தது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து 2001 தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு, 20 இடங்களில் வென்று பத்தாண்டுகளில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்தது. அடுத்த தேர்தலில் 2006ல் திமுக கூட்டணியில், 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளாக குறைந்தது. 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது.
மாற்றம்.. முன்னேற்றம்… அன்புமணி என்று 2016ம் ஆண்டு தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்டது. தனது வாக்கு வங