குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார்.
டெல்லியில், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நெஞ்சு வலி ஏற்பட்டதாக இரணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இது வழக்கமாக மேற்கொள்ளும் சிகிச்சை என்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், பிரதமர் மோடி குடியரசு தலைவரின் மகனான பிரசாந்திடம் தொடர்பு கொண்டு தந்தையின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவரின் உடல் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வதாக கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், குடியரசு தலைவர் அவருடைய முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். பின்னர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகள் என அனைவரின் உழைப்பையும் பாராட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்







