பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து..

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகிய மாவட்டங்களில்…

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 8 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 41 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளையும், 332 வார்டு உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.

https://twitter.com/narendramodi/status/1450655200981618694

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவினருக்கு வாழ்த்துக்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.