தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் “மன் கி பாத்” எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 76வது முறையாக இன்று வானொலியில் உரை நிகழ்த்திய பிரதமர், கொரோனா முதல் அலையை எதிர்த்து இந்தியா வெற்றிகண்டதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், 2ம் அலை அதிகவேகமாக பரவுவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்றரை லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரதமர், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மேலும் இதே போன்று, மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். தடுப்பூசி பற்றிய எந்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் 14 கோடிக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.