மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி சென்னை வந்து மெட்ரோ…

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி சென்னை வந்து மெட்ரோ விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் மார்ச் 1ம் தேதி மீண்டும் அவர் தமிழகம் வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

அதற்கு முன்னதாக வரும் 27ஆம் தேதி கேரளாவிற்கும், 28ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கும் அவர் செல்லவிருப்பதாகவும், அதைத்தொடர்ந்து மார்ச் 1ம் தேதி தமிழகம் வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.