31.9 C
Chennai
May 30, 2024
தமிழகம் செய்திகள்

தருமபுரி ஏரிக்கரையில் 600 மரக்கன்றுகள் நடும் விழா!

தருமபுரியில், இயற்கை காப்போம் தலைமையகம் மற்றும் பசுமை புரட்சி அமைப்பினர் இணைந்து 600 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இயற்கை காப்போம் தலைமையகம் என்ற அமைப்பினை கடந்த 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து துவக்கினர். இவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். மேலும், இந்த அமைப்பின் மூலம் இதுவரை 45 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், அளேதர்மபுரி ஊராட்சி மன்றம் மற்றும் இயற்கை காப்போம் தலைமையகம் ஒருங்கிணைந்து, ராமாக்கால் ஏரிக்கரையில் 600 மரக்கன்றுகள் நட்டனர். ஏரிக்கரையில் நடப்பட்ட மரக்கன்றுகள், ஏரி கரைக்கு பலப்படுத்தக் கூடியதும் மற்றும் அதிக நிழல் தரக்கூடிய மரங்கள் ஆகும்.

அரசன், அத்தி, ஆலமரம், செம்மரம், மகிழம், வன்னி, பெருநெல்லி, விளாம்பழம்,
வெண்கடம்பு, பெரிய இலந்தை என 30 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த விழாவில் அளேதர்மபுரி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் மற்றும் இயற்கை காப்போம் தலைமையகம் நிறுவனர் தாமோதரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

– கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading