மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகை இனி முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பாதி தொகை ரொக்கமாகவும், பாதி தொகை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், முழு தொகையும் இனி ரொக்கமாகவே வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் டிகிரி, டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரூ.50,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்றும், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.