சென்னை பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றிய கே.வி.சீனிவாசன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியில் பாசுரங்கள் பாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து நாளிதழில் வெளியிடுவதற்கான பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ், உயிரிழந்த கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.