மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு. 

 மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை…

 மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு  போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை  செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.’

உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடைமுறை தான் பின்பற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், இதற்கு புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்றச் செய்வோம் எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை  8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.