மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டனர். அதில் 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும். அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்திலும் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல், வட இந்தியாவில் தசரா பண்டிகை 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வடமாநிலங்களில் தரசா பண்டிகையையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவது போல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







