தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். மூசிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட நபர்களை, காவல் துறையினர் தமிழ்நாடு சூதாட்டத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மேலும், சுரங்கப்பாதை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 26 இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய முக்கிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.







