மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த கருத்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.
தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வனதுறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் , முதலமைச்சர் முன்னதாகவே வந்ததால் 9:45 மணிக்கு தொடங்கியது.
கூட்டத்தில் துவக்க உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும் என்றார்
எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்துதெரிவிக்க வேண்டும் என்றும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது, அது மஞ்சளா இருக்கலாம், இயற்கை வளங்கள் ஆக இருக்கலாம் அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது அரசுக்கு வருமானம் பெறுவது குறித்து விவசாயிகள் ,தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து கருத்துக்களை ஆட்சியர் தெரிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டார் . நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். என்று கூறிய முதல்வர் . அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.







