தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்றுள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன.
அண்மைச் செய்தி: ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுவினர் கலந்து கொள்வார்கள் என அக்கட்சியின் தலைமை கழகம் தெரிவித்திருந்தது. இதேபோன்று, தேநீர் விருந்த பங்கேற்க உள்ளதாக பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் பங்கேற்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.