கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பயணித்து வருவதாக காங்கிரஸ் ’WAR ROOM’ தலைவர் ஷஷிகாந்த் செந்தில் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கர்நாடகாவுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன், விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன், எம்பி ஜோதிமணி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் ‘WAR ROOM’ தலைவரும், முன்னாள் IAS அதிகாரியுமான ஷஷிகாந்த் செந்திலுடன் நமது சிறப்பு செய்தியாளர் வசந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸின் சித்தாந்தம், கர்நாடகாவுக்கு தேவை என்பதால் இந்த வேலையைச் செய்கிறோம். 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பயணித்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை தருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :