காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளர்கள் உடன் இருவர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களாக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டதால் காவல்துறையினருக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 60 சதவீதத்திற்கு மேல் பெண்கள் போட்டியிடுவதால், வேட்புமனு தாக்கல் செய்ய அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து
உடன் அழைத்து செல்லப்பட்ட நபர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். முதன்முறையாக தேர்தல் களம் காணுபவர்கள் வேட்புமனு தாக்கலில் சிரமப்படுவதாக கூறி, வேட்பாளருக்கு உதவி செய்ய இருவரை அனுமதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.