ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக ஆட்சி போய் தலிபான்களின் வலுக்கட்டாயமான ஆட்சி வந்ததிலிருந்து ஆப்கன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடி உலகின் மிக மோசமானது என்று ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலராவாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மூசா கலா மாவட்ட மருத்துவமனை காலராவால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
காலராவை பரிசோதிப்பதற்கான வசதிகள் கிளினிக்கில் இல்லை என்றாலும், சுமார் 550 நோயாளிகளுக்கு சில நாட்களில் சோதனை செய்யப்பட்டது. சுத்தமான குடிநீர் மற்றும் போதுமான கழிவுநீர் அடிப்படை சுகாதாரத் தேவைகள் இல்லாததால் காலரா ஏற்படுகிறது.
இது மிகவும் கடினமான சூழல் என்று மருத்துவமனை தலைவர் எஹ்சானுல்லா ரோடி, தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் மிகவும் வறுமை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகும் வறட்சி மற்றும் பணவீக்கத்தால் ஆப்கன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
“தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எங்களால் சமையல் எண்ணெயைக் கூட வாங்க முடியவில்லை,” என்று ஒரு பெண் வேதனையுடன் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாடு வார்டில் போதிய வசதிகள் இல்லை. சாப்பிடுவதற்கு பிரெட் கூட கிடைப்பதில்லை என்று நோயாளி ஒருவர் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மொத்தத்தில் தலிபான் ஆட்சி புரிந்துவரும் ஆப்கானிஸ்தான் கடுமையான