குலசேகரம் தனியார் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்! மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உற்சாக நடனம்!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பெரிய திருவாதிரை நடனம், அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த விழாவான திருவோண பண்டிகை…

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பெரிய திருவாதிரை நடனம், அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த விழாவான திருவோண பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் விழா கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் அமைப்புகள் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குலசேகரத்தில் அமைந்துள்ள தனியார் ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் இன்று ஓணம் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பெரிய திருவாதிரை நடனம், மாவேலி மன்னன் வாமனன் வேடமணிந்து நடன நிகழ்வு,  செண்டை மேளத்துடன் உற்சாக நடனம் என பல்வேறு வகையான இசை
நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் வகுப்பு வாரியாக மாணவ மாணவிகள் பிரம்மாண்டமான அத்தப்பூ கோலங்கள் போட்டு அசத்தியதுடன் வடம் இழுக்கும் போட்டி, நடனம், உறியடி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ஓண விழாவில் மாணவ மாணவிகளுடன் பேராசிரியர்களும் இணைந்து நடனமாடி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஓட்டி குமாரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.