24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரஜினியுடன் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது – தனுஷ்

ரஜினி தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தேசிய விருது பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதில், திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ராஜினிக்கு வழங்கப்பட்டது. அதேபோல அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விருது பெற்ற பின்னர் டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார் தனுஷ். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி தாதாசாகேப் பால்கே விருது வாங்கும் மேடையில் நானும் தேசிய விருது பெற்றது பெருமையாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் உள்ளது.

வெற்றிமாறனும் நானும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறோம். எல்லா படங்களும் வெற்றியையும் வரவேற்பையும் எல்லா தரப்பிலும் பெற்று வருகிறது. 2 தேசிய விருதுகளும் வெற்றிமாறன் தந்த கதாபாத்திரம் மூலமாகதான் கிடைத்துள்ளது.

வெற்றிமாறனுக்கும் தாணுவிற்கும் தேசிய விருது குழுவிற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy