பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக வல்லுநர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக நிதித்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி தெரிவித்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு மாற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவை அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையின் மீது எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDAவுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும். ஒய்வூதியப் பிரிவு ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிதித்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி குறிப்பிட்டுள்ளார்.