அக். 14-ல் தமிழ்நாடு வருகிறார் சோனியா காந்தி! நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாகுமா?

கனிமொழி அழைப்பின் பேரில் அக்டோபர் 14 ஆம் தேதி சோனியா காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14ஆம்…

கனிமொழி அழைப்பின் பேரில் அக்டோபர் 14 ஆம் தேதி சோனியா காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தருவதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு இறுதியாவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி தமிழ்நாடு வந்திருந்தார்.

இது தொடர்பாக நமது சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவின் முழு காணொலியை காண…

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.