ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்; ஏ.சி.டி.சி நிறுவனம் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு…

ஏ சி டி சி நிறுவனத்தின் மீது கானத்தூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி…

ஏ சி டி சி நிறுவனத்தின் மீது கானத்தூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தங்களது வாகனங்களில் வந்தனர். இதனால் ஓ.எம்.ஆர், பனையூர், ஈசி.ஆர் ஆகிய சாலைகளில் சுமார் 3 மணி நேரங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

குறிப்பாக இந்த வாகன நெரிசலில் முதல்வரின் கான்வாய் வாகனமும் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலரும் அரங்கத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சீட் ஒதுக்கீடுகள் சரியில்லை என்றும் டிக்கெட் எடுத்த பலரையும் திருப்பி அனுப்பியதாக கூறி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்ட காரணம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்நிகழ்ச்சியில் 25,000 பேர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக காவல்துறையிடம் அனுமதி பெற்றதும், அதை விட அளவுக்கதிகமாக கூட்டம் வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் 6000 கார்கள் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டிருந்த நிலையில் 10,000க்கும் மேற்பட்ட கார்கள் வந்ததால் இடமில்லாமல் சாலைகளில் நிற்க வைத்து சென்றதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் தெரியவந்தது. கடந்த மாதம் 12ம் தேதி இந்நிகழ்ச்சி மழையால் ரத்தான நிலையில் அதற்கான டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,

இதனை காவல்துறையிடம் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சரியாக தெரிவிக்காததால் குளறுபடி ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏசி.டி.சி நிறுவனத்தை சேர்ந்த ஹேமந்த், செந்தில் உட்பட ஐந்து பேரிடம் தாம்பரம் காவல் ஆணையர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது குளறுபடிக்கு மன்னிப்பு கேட்டதாகவும், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பொதுமக்கள் பலரும் கொண்டு வந்ததால் கணிப்பு தவறிவிட்டது என்றும் ஒரே நுழைவு வாயிலில் பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பான விரிவான விளக்கத்தை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்தியனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இசை நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏற்பட்ட குளறுபடி சம்மந்தமாக ACTC நிறுவனத்தின் மேலாளர் மீது கானத்தூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Ipc 406 தன்னுடைய சுய லாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செய்தது, 188 அதிகப்படியான மக்கள் கூட்டியதற்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தது என ACTC நிறுவன இயக்குநர் ஹேமந்த் மற்றும் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.