32.5 C
Chennai
June 1, 2024
உலகம் இந்தியா செய்திகள்

சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலில் அணுசக்தி சரக்குகள்? -மும்பையில் தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள்!

சீனாவில் இருந்து கராச்சி நோக்கிச் வந்த கப்பலில், பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய சரக்கு இருந்ததாக சந்தேகத்தின் பேரில், மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.

மும்பை துறைமுகத்தில் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தின. இந்த கப்பலில் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான சரக்குகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. கப்பலை நிறுத்தியதற்கு பாகிஸ்தானில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கப்பலில் ஏவுகணை தொடர்பான பொருட்கள் எதுவும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சஹ்ரா பலோச் கூறியதாவது:

இந்திய ஊடகங்கள் உண்மைகளை தவறாக சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இது கராச்சியை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் லேத் மெஷின் இறக்குமதியின் எளிய நிகழ்வு. இந்நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு இயந்திர உதிரிபாகங்களை வழங்குகிறது. இந்த சாதனங்கள் தொழில்முறை பயன்பாட்டிற்காக தெளிவாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று பாகிஸ்தான் கூறியது.

கப்பலில் தேவையான ஆவணங்கள் உள்ளன என்றும், இயந்திரம் வாங்கியது தொடர்பான வங்கி சலான்கள் போன்றவை வெளிப்படையான முறையில் உள்ளன என்றும் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தியாவின் இத்தகைய நடவடிக்கை பொருத்தமற்றது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் நிறுவனங்கள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுபோன்ற தன்னிச்சையான கைப்பற்றலை பாகிஸ்தான் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தகத்தில் தடைகளை உருவாக்க இந்திய காவல்துறை செயல்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், தன்னிச்சையான அணுகுமுறை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

உளவுத்துறை தகவல்

உளவுத்துறையின் தகவலின் பேரில் சுங்கத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊடகச் செய்திகளின்படி, சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற கப்பலை, மும்பை துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தின. கப்பலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கராச்சி துறைமுகத்திற்கு செல்வதாக கூறப்பட்டது. உளவுத்துறையின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் நவீன இயந்திரங்கள் மூலம் கப்பலை சோதனையிட்டதில், பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பொருட்கள் இந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்படுவது தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading