32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுமைப் பெண் திட்டத்தில் இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தில் இனி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது. தற்போது, புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு /தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவங்கப்பட்டது. இதுவரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வலைதளத்தில் மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது என்றும், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணிற்காக மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய, மேற்படிப்பு/ தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் அனைவரும் 11.11.2022க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading