பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சார்ந்த பென் எஸ்.பெர்னான்கே, டக்ளஸ் டைமண்ட், பிலிப் எச்.டிப்விக் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு…

2022ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சார்ந்த பென் எஸ்.பெர்னான்கே, டக்ளஸ் டைமண்ட், பிலிப் எச்.டிப்விக் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆலன் ஏஸ்பெக்ட், ஜான் எஃப்.கிளாசர், ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் ஆர்.பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்ஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு, ரஷ்யாவின் மெமோரியல் அமைப்பு மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொருளதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி பற்றிய ஆய்வு மேற்கொண்டமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னான்கே, டக்ளஸ் டைமண்ட், பிலிப் எச்.டிப்விக் ஆகிய மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.