பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், இதர துறைக்கான நோபல் பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
BREAKING NEWS:
The 2021 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded with one half to David Card and the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens.#NobelPrize pic.twitter.com/nkMjWai4Gn— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை பாதிப்புகளை பகுப்பாய்வு செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிட் கார்டுக்கு நோபலில் ஒரு பாதி வழங்கப்பட்டது. மற்றொரு பாதியை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து ஜோசுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைடோ இம்பன்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.