தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை கேள்வி நேரத்தில், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கருத்து கணிப்பு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கேள்விக்கு எழுத்துபூர்வமாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அதில், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த கருத்து கருணிப்பு, வாக்கு கணிப்பு போன்றவை தொடர்பாக இப்போது உள்ள விதிகளே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று கூறினார்.
மேலும், வாக்குப்பதிவுக்கு பிறகு நடைபெறும் வாக்கு கணிப்பு என்பது தேர்தல் நடந்து முடிந்து அரை மணி நேரம் கழித்து தான் வெளியிடப்படுகிறது. எனவே இதனால் தேர்தலில் எவ்வித தாக்கமும் ஏற்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.