புதிய வகை கொரோனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்பதால், மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கேரள எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று இன்னும் குறையாததால், அந்த பகுதி மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறையத் தொடங்கும் கொரோனா https://t.co/WciCN2SQmv | #Corona | #Tamilnadu | @Subramanian_ma | #News7TamilUpdates pic.twitter.com/P9BsmyKS6a
— News7 Tamil (@news7tamil) January 30, 2022
மேலும், புதிய வகை கொரோனாவை பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை எனக்கூறிய ராதாகிருஷ்ணன், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘கடைசி விவசாயி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?
அதன்படி நேற்று, தமிழ்நாட்டில் 25,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று குறைந்திருந்தது. புதிதாக 24,418 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,885 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்றால் 33,03,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது.
மேலும், சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4,508 ஆகக் குறைந்துள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் 3,309 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,198 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,649 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,264 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.