சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரிடம் இருந்து 4 கடிதங்கள் வந்துள்ளது. அதன்பின்னர், 21 உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்களை மன்னித்து விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையடுத்து அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன். எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, உறுப்பினர்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. என்ன நடவடிக்கை என்பது பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




