பட்டுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்ற ”நிகரென கொள் 2023” நிகழ்ச்சியில் பாலின சமத்துவத்திற்கான உறுதிமொழி மற்றும் மாதவிடாய் விடுமுறைக்கான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் பாலின சமத்துவத்திற்கான உறுதிமொழி மற்றும் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாலின சமத்துவத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, இந்திய மருத்துவக் கழக தலைவர் சதாசிவம், மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
இதனைத் தொடர்த்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சி குறித்து பேசிய மருத்துவர் சதாசிவம், நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள இந்த மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலிகள் குறித்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.