தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.
கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஷாரிக் குக்கர் வெடிகுண்டை வெடிக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் தீவிரவாதி ஷாரிக் கோவை,மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வந்து தங்கி சென்றது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மதரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் என்ஐ ஏ அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் என்ஐஏ அமைப்பின் இயக்குனர் தின்கர் குப்தா இன்று மாலை டிஜிபி அலுவலகம் வந்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் மற்றும் மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த நிலையில் இந்த வழக்குகளை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குனர் தின்கர் குப்தா தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பேசியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி கார் குண்டு வெடித்ததில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதியான ஜமேஷா முபீன் உயிரிழந்தார். தொடக்கத்தில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் உயிர்ப்பு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், வெடிவிபத்து நடந்த இடத்தில் கிடைத்த வெடிபொருட்கள் மற்றும் பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்ட பிறகுதான் வெடிகுண்டு வெடித்து சிதறியது தெரியவந்தது. இதன்பிறகே காரில் வெடிகுண்டுகளை வைத்து கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், நல்லவேளையாக சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இந்த வலக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்ததோடு, தமிழகம் முழுவதும் உயிரிழந்த ஜமேஷா முபீன் கூட்டாளிகள், தொடர்பில் இருந்தவர்கள் என 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து தமிழக காவல்துறையும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாத ஆதரவு குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் மங்களூருவில் கோவில், பாலம் உள்ளிட்ட இடங்களில் உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்த வெடிகுண்டை ஆட்டோவில் கடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான் ஷாரிக் செல்லும்போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் தீவிரவாதி ஷாரிக் சம்பவத்திற்கு முன்பு கோவை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வந்து தங்கி பலரை சந்தித்து சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து கர்நாடக மாநில என்ஐஏ அதிகாரிகளும், தமிழக என்ஐஏ அதிகாரிகளும் கோவை,மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே என்ஐஏ தேசிய இயக்குனர் தின்கர் குப்தா தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை டிஜிபி அலுவலகம் வந்து சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த அல்சோனை கூட்டத்தில் தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பது குறித்து மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள முக்கிய தகவல்கள் மற்றும் தீவிரவாதிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. என்ஐஏ தேசிய இயக்குனர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.