போட்டி தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் செய்திகளை அறிந்து கொள்வது மிக
அவசியமான ஒன்று என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மதுரையில் நடைபெற்ற நீயூஸ் 7
தமிழ் & கிங் மேக்கர்ஸ் அகாடமி பட்டறையில் தெரிவித்தார்.
நியூஸ் 7 தமிழ் மற்றும் கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து பட்டறை 2022
போட்டி தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை காமராசர் சாலையில் தமிழ்நாடு தொழில்
வர்த்தக சங்க அரங்கத்தில் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ்
சேகர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி
பூமிநாதன், மேலூர் வருவாய் கோட்டாச்சியர் பிர்தவுஸ் பாத்திமா மற்றும்
கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி
பட்டறையில் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் “போட்டி தேர்வில் பங்கேற்க இருப்பவர்கள் எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். போட்டி தேர்வுக்கான
பாடத் திட்டம் என்ன என்பதை அடுத்து தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். போட்டி தேர்வை போரில் எதிரியை எதிர்கொள்வது போல் அணுக வேண்டும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை முழுமையாக அறிந்து தயார்படுத்த வேண்டும். போட்டி தேர்வுகள் கேள்விகள் கடினமானவையாக மாறி வருகிறது. போட்டித் தேர்வு எழுதுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்வுக்கான கடைசி நேரத்தில் தயார்படுத்தி கொள்ள கூடாது. போட்டித் தேர்வை
எதிர்கொள்ளும் தேர்வர்கள் செய்திகளை அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.
மதுரையில் படிப்பதற்கு இடம் இல்லாத நிலையை உருவாக்க மதுரை கலைஞர் நூலகம் வெகு விரைவில் வரவுள்ளது” என பேசினார். மதுரை மேலூர் வருவாய் கோட்டாச்சியர் டாக்டர் ஃபிர்தவுஸ் ஃபாத்திமா பேசுகையில் “போட்டித் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராவதையும், குடும்ப சூழலையும் பிரித்துப் பார்த்து தங்களுடைய இலக்கை அடைய வேண்டும்” என பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவ & மாணவிகள் நீயூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்தனர்.