தமிழ்நாடு நிதித்துறை சார்பில் புதிய வலைத்தளம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நிதித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிதித்துறை சார்பில், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

நிதித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிதித்துறை சார்பில், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியதுடன், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள Companies Compliances and Financials Monitoring System http://www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1618861578002272256

 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ், பங்கு முதலீடு செய்வதற்காக 5 புத்தொழில் நிறுவனங்களில் ரூ 7.50 கோடிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.