ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஜென் புல்லட் 350 மாடலை செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350சிசி பைக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், ஏனென்றால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த நிறுவனம் புதிய புல்லட்டின் விலையை அறிவிக்கலாம். ஊடகங்களின் செய்தி அறிக்கையின்படி, பைக்கின் விலை செப்டம்பர் 1, 2023 அன்று அறிவிக்கப்படும். நீங்களும் புல்லட் 350க்காக காத்திருக்கிறீர்கள் என்றால் இந்த தேதியை நினைவில் கொள்ளுங்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புல்லட் 350 யின் வடிவமைப்பு:
புல்லட் 350 இன் சிறப்பம்சங்கள் பெரிய அளவில் RE கிளாசிக் 350 போன்றே இருக்கும் என்று கூறப்படுகிறது. வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் காணப்படும். மோட்டார் சைக்கிள் ஜே-பிளாட்ஃபார்மில் கட்டப்பட்டுள்ளது. இதில் 349சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 20எச்பி பவரையும், 27என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். தற்போது சந்தைகளில் கிடைக்கும் புல்லட் UCE மோட்டருடன் வருகிறது. ஆனால் புதிய மாடலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புல்லட் 350 புதிய டெயில்-லேம்ப், சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் செவ்வக பேட்டரி பெட்டியுடன் வரலாம். பழைய மாடல்களைப் போலவே, புதிய மாடலின் எரிபொருள் டேங்கிலும் கையால் வரையப்பட்ட பின்ஸ்ட்ரிப்களைக் காணலாம்.
2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 யின் விலை:
புல்லட் 350 ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 க்கு இடையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம். ஹன்டரின் விலை ரூ.1.50 லட்சமாகவும், கிளாசிக் விலை ரூ.2.25 லட்சமாகவும் உள்ளது. இந்த நிலையில், புதிய மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1-1.2 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது . இருப்பினும், இது தொடர்பான தகவல்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி தெரியவரும். இந்த பைக்கை ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா