நெதர்லாந்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த போராட்டத்தின்போது காவல்துறையினரின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.