நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி கடந்த மே மாதம் 22ஆம் தேதி குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். புதிய தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 மனுதாரர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்துவந்தது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷெர் பகதூரை பிரதமராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்னும் 28 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஆளும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவரான கேபி ஷர்மா ஒலிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.







