32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு : அடுத்த ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

2024-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜேஇஇ முதல் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜேஇஇ இரண்டாம் தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க்யூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15 முதல் மே 31, வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரை

EZHILARASAN D

மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

G SaravanaKumar

வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

Halley Karthik