நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் யாரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இன்று மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான முறையில் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி நயன்தாராவை விக்னேஷ் சிவன் கரம்பிடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கண்ணாடி மாளிகையில் திருமணம்
நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணத்துக்காக மாமல்லப்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டு அதில் அவர்கள் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் மோகன் ராஜா, கலா மாஸ்டர், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், இயக்குநர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் கலந்து கொண்டார்.
மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ரூ.25 கோடி
திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கியது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே திருமணத்தை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை இயக்குநர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக 80-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
20 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு
20 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று இலவசமாக மதிய உணவு வழங்க நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மத நல்லிணக்க திருமணம்
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நயன்தாரா. அவருடைய திருமண பத்திரிக்கையிலும் தந்தையார் பெயர் குரியன் கொடியாட்டு என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் கால் பதித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நயன்தாரா பின்னர் திருப்பதி, அமிர்தசரஸ் பொற்கோவில், தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதையும் படியுங்கள்: நடிகை நயன்தாரா திருமணம்; பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள்
அண்மையில் மயிலாடுதுறை அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோவிலில் தமது திருமணத்தையொட்டி விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். இவரின் திருமணம் இன்று வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி நடந்தது. இதனால் இத்திருமணம் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.