தென்மாவட்ட நவக்கிரகத் திருத்தலங்கள் மேம்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக பக்தர்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் என்று பக்தர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது” என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “கடந்த மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. புகழ்பெற்ற நவக்கிரகக் கோயில்கள், நவக்கயிலாயக் கோயில்கள், பஞ்சசபை, அட்டவீரட்டானத் தலங்கள் ஆகிய திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில் உட்பட பாண்டிய நாட்டு நவக்கிரகங்கள் திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, அதன் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் மதுரை, அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் (சூரியன்), தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோயில்(சுக்கிரன்), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (செவ்வாய்), சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (புதன்), மதுரை மாவட்டம், கொடிமங்கலம் அருள்மிகு நாகமலை நாகதீர்த்தம் நாகேஸ்வரர் திருக்கோயில் (கேது), தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனிபகவான் திருக்கோயில் (சனி), தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில் (ராகு),
மதுரை மாவட்டம், குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப்பெருமாள் திருக்கோயில் (குரு), சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நவகிரகத் திருத்தலங்கள் அமைக்க பணிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.