மணிப்பூரில் கொடூரத்திற்கு மேல் கொடூரம்…மே 4-ல் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…

மணிப்பூரில்  மே 4ம் தேதி அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அதேநாளில்  மேலும் 2பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் மூன்று…

மணிப்பூரில்  மே 4ம் தேதி அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அதேநாளில்  மேலும் 2பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தியுள்ளனர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது.

இந்த நிலையில் கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று  இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலிக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 4பேரை கைது செய்து 11நாட்கள் காவலில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடையும் விதமாக மணிப்பூர் வீடியோ வெளியாகி அதே தினத்தில் சில மணி நேரம் கழித்து பி ஃபைனோம் கிராமத்தில் மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இம்பாலில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமத்தில் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.