சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்தவில்லை என பால் முகவர் பொன்னுசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், சங்கத் தலைவரை கிடையாது எனவும் அவர் கேள்வி கேட்கவே தகுதி இல்லை எனவும் விமர்சித்தார்.
அவர் தான் ரவுடி என சொல்வது போல் அவர் தலைவரென சொல்லி வருவதாகவும் அமைச்சர் நாசர் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் நோட்டாவுடன் குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவுக்கும் அதன் தலைவர் அண்ணாமலைக்கும் பதில் சொல்ல முடியாது என கூறினார். அண்ணாமலையா அவர் உண்ணாமலைய என சாடினார். கடந்த 10 ஆண்டுகள் போதைப் பொருள்கள் தடுக்காமல் அதிமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பலவிதமான இனிப்புகள் ஆவினில் தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி சின்னத்தில் ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படும் என அறிவித்தார். பால் விலை 3 ரூபாய் குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பால் விலை குறைவால் ஒரு நாளைக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் நாசர் விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்








