முக்கியச் செய்திகள்இந்தியா

நடுவானில் பரபரப்பு… இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த நபர்… நடந்தது என்ன?

இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்ததற்காக பயணி ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

நேற்று (மார்ச் 5) டெல்லியிலிருந்து மும்பை சென்ற விமானத்தின் கழிவறைக்குள் 42 வயது பயணி ஒருவர் பீடி புகைத்ததாக கூறப்படுகிறது. பீடியின் கடுமையான புகை வாசனையானது பணியாளர்களிடையே சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் இண்டிகோ விமான ஊழியர்களிடம் உடனடியாக புகார் அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, ​​கழிவறைக்குள் பயணி ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்கள் புகைபிடித்த பயணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது செயலை ஒப்புக் கொண்டார்.

இதன் விளைவாக அவர் மீது ஐபிசி மற்றும் விமானச் சட்டம் பிரிவு 336 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த நபர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விமானத்தில் சிகரெட் புகைத்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம், துபாயில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் அரங்கேறியது. கழிவறைக்குள் ஒரு நபர் புகைபிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் விமானம் தரையிறங்கியதும் மும்பையின் சஹாரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, சஹார் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 இன் கீழ் மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காகவும், விமான விதிகளின் பிரிவு 25ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 2023 இல், இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த மற்றொரு பயணி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேபின் குழுவினர் குப்பைத் தொட்டியில் ஒரு சிகரெட்டைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் மீதும், சக பயணிகளின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

சுற்றி வளைத்த ஆஸி- அசால்ட் செய்த இங்கிலாந்து

Arivazhagan Chinnasamy

சிம்பு 48 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading