புதுச்சேரியில் தடுப்பூசி, மருந்துகள் என எதற்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு, காலை 8 மணி முதலே, மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியது சாதனை சரித்திரம் என்றும், உலகிலேயே தடுப்பூசி திட்டம் இந்தியாவில்தான் விரைவாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், தவளக்குப்பம் பகுதியில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் எனவும், மீதமுள்ள 9 சதவீதம் பேர் விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்கு இன்று மட்டும் 1 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
Full You tube video Link : https://t.co/Yj06qr4CFL pic.twitter.com/eX2FpeKG3Z
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 25, 2021
மேலும், புதுச்சேரியில் தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள், படுக்கைகள் என எதற்கும் தட்டுபாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.