33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மீரா மிதுன்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

பட்டியலின சமூகத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர். அதற்கான வாரண்டை புழல் சிறையில் கொடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading