ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் விராத் கோலி தலை மையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், எவின் லெவிஸ் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 31 ரன்கள் குவித்து வெளியேற, அதிரடியாக ஆடிய லெவிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 19 ரன்களின் கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்க ளாக கேப்டன் விராத் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 22 ரன்களில் வெளியேற, அடுத்து ஸ்ரீகர் பரத் விராத்துடன் இணைந்தார்.
கேப்டன் கோலி 25 ரன்களில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய மேக்ஸ்வெல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பரத் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.