கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டை, அடையாளம் தெரியாத நபர்கள், அடித்து நொறுக்கிச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றைய தினம் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டு தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கம்யூனிஸ்ட் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு மோதலாக மாறியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நள்ளிரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார செயலாளர் ஜினு ஜெனால்டு என்பவரின் வீட்டை அடையாளம் தெரியாத நபர்கள் சூறையாடினர். காரின் கண்ணாடி உட்பட அனைத்தையும் அடித்து உடைத்தது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகுறது. இதுகுறித்து ஜினு ஜெனால்டு அளித்த புகாரின்பேரில், மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்